• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெ.நா.பாளையம் மேம்பால பணிகள் மாற்றுப்பாதையில் உள்ள சாலைகளை சீரமைக்க கோரிக்கை

March 5, 2022

கோவை அருகே பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் நடைபெறும் மேம்பால பணிகளுக்காக வாகனங்கள் மாற்று பாதையில் மாற்றிவிடப்பட்டுள்ளன.இந்த மாற்று பாதைகளில் சாலைகள் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.மாற்று பாதையில் உள்ள சாலைகளை சீரமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் பெரியநாயக்கன்பாளையத்தில் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா முதல் சாமிசெட்டிபாளையம் பிரிவு வரை 1.4 கி.மீ. நீளத்துக்கு சுமார் ரூ.85 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டுமான பணி துவங்கி நடைபெற்று வருகிறது.
இதில், எல்.எம். டபிள்யூ பிரிவு பகுதியில் இருந்து சாமிசெட்டிபாளையம் வரை தூண்கள் அமைக்கும் பணி, வேகமாக நடந்து தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மேம்பால பணிகளை விரைவாக மேற்கொள்ள வாகனங்கள் மாற்று பாதைகளில் திருப்பிவிடப்பட்டுள்ளன.

மாற்றுவழி பாதையும் முன் ஏற்பாடுகள் செய்யப்படாமல் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளதால் சாலைகள் சேதமடைந்துள்ளன.இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,

‘‘பெரியநாயக்கன்பாளையம் மேம்பால பணிகள் தொடர்ந்து அலட்சியமாக நடைபெற்று வருகிறது. மாற்றுப்பாதைகளில் பல இடங்களில் சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. அப்பகுதிகளில் சாலை அமைக்கப்படாமல் உள்ளதால் புழுதி காற்று பரக்கிறது. உடனடியாக சாலைகளை சீரமைத்து தர வேண்டும்’’ என்றனர்.

மேலும் படிக்க