• Download mobile app
01 May 2024, WednesdayEdition - 3003
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோவில்

October 14, 2017 findmytemple.com

சுவாமி : உதிராபதீசுவரர், ஆத்திவனநாதர், மந்திரபுரீசுவரர், பிரமபுரீசுவரர், பாஸ்கரபுரீசுவரர்.

அம்பாள் : சூளிகாம்பாள், திருக்குழலம்மை.

தீர்த்தம் : சத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், அக்கினி தீர்த்தம், சந்திர தீர்த்தம், இந்திர தீர்த்தம், இயம தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம், சீராள தீர்த்தம் என்னும் 9 தீர்த்தங்கள்.

தலவிருட்சம் : அத்தி மரம்.

தலச்சிறப்பு : கோயில் ஊரின் நடுவே கிழக்கு நோக்கியுள்ளது. இறைவன் சிறுத் தொண்ட நாயனார்க்குப் பைரவர் திருக்கோலத்தில் வந்து பிள்ளைக்கறியமுது கேட்டு அருள்புரிந்த தலம். இக்கோயிலுக்கு மந்திரபுரீசம், சக்திபுரீசம், இந்திரபுரீசம், ஆத்திவனம், பாஸ்கரபுரீம் என்னும் வேறு பெயர்ளும் உள்ளன. கோயிலை அடுத்து சிறுத் தொண்டர் வாழ்ந்த மாளிகை இன்று கோயிலாக உள்ளது.

தல வரலாறு : யானை முகம் கொண்ட கஜமுகாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் சம்ஹாரம் செய்தார். இதனால் அவருக்கு தோஷம் உண்டானது. தோஷம் நீங்க இத்தலம் வந்தார். சுயம்புவாக எழுந்தருளி இருந்த சிவனை வழிபட்டார். சிவன் அவருக்கு காட்சி தந்து தோஷம் நீக்கியருளினார். எனவே சிவன், “கணபதீஸ்வரர்” என்று பெயர் பெற்றார்.

நடைதிறப்பு : காலை 6.45 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்து இருக்கும்.

மேலும் படிக்க