• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோவில்

August 13, 2018 findmytemple.com

சுவாமி:பிரளயகாலேஸ்வரர்.

அம்பாள்:அழகிய காதலி (ஆமோதனம்பாள்,கடந்தை நாயகி),மகாலட்சுமி, சண்டிகேஸ்வரி.

தீர்த்தம்:பார்வதி தீர்த்தம்,கயிலை தீர்த்தம்,இந்திர தீர்த்தம்,முக்குளம்,வெள்ளாறு.

மூர்த்தி:சௌந்தரேஸ்வரர்,மெய்கண்டார்,கலிக்கம்ப நாயனார்,தண்டபாணி உருவங்கள்,கோடிவிநாயகர்,சோமாஸ்கந்தர்,விசுவேஸ்வரர்,முருகன்,சண்டேஸ்வரர்.

தலவிருட்சம்:செண்பக மரம்.

தலச்சிறப்பு:எங்கும் இல்லாத சிறப்பாக இத்தலத்தில் உள்ள நந்தி ஊரை நோக்கி (சிவனுக்கு எதிராக) திரும்பி இருக்கிறது.இக்கோயிலுக்குத் ‘தூங்கானைமாடம்'(கஜப் பிரஷ்டம்) என்பது பெயர்.சம்பந்தர்,அப்பர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம்.ராஜகோபுரம் 5 நிலைகளை கொண்டது.

கோயிலின் முன் வாயிலில் தென்பகுதியில் குடவரை விநாயகரைத் தரிசிக்கலாம்.மதிலையடுத்து உள்ளே நந்தவனம் உள்ளது.வடபகுதியில் 30 அடி உயரமுள்ள அழகான துவஜஸ்தம்பம்,பக்கத்தில் கிழக்கு நோக்கிய பிரதோஷ நந்தி சந்நிதி உள்ளது.உள்ளே நுழைந்தால் பதினாறுகால் மண்டபம். மூலவரின் கர்ப்பக் கிருகத்தின் விமானம் ஐராவதம் வழிபட்டதற்கு அடையாளமாக யானை நிற்பது போல் அமைந்துள்ளது.மூலலிங்கம் சுயம்பு,சற்று உயரமானது,ஆவுடையார் சதுர வடிவானது. கர்ப்பக்கிருகத்தின் முன்வாயில் தவிர,ஏனைய மூன்று புறங்களிலும் இறைவனைக் கண்டு வணங்குமாறு சன்னல்கள் பலகணிகள் அமைந்திருப்பது சிறப்புடையது.சுற்றுப்பகுதியில் உற்சவத் திருமேனிகள் காட்சியளிக்கின்றன.

கோயில் முகவரி:அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் கோவில்,பெண்ணாடம் – 606 105, கடலூர் மாவட்டம்.

மேலும் படிக்க