சுவாமி:புருஷோத்தமர்.
அம்பாள்:புருஷோத்தம நாயகி.
மூர்த்தி:ராமர்,சீதை,லட்சுமணன்,ஆஞ்சநேயர்.
தீர்த்தம்:திருபாற்கடல்.
தலவிருட்சம்:பலா,வாழைமரம்.
தலச்சிறப்பு:பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இத்தலம் 30 வது தலம் ஆகும். இத்தலத்தில் மூலவர் புருஷோத்தமர் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தாயார் புருஷோத்தம நாயகி அமர்ந்த திருக்கோலத்தில் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் ராமர்,சீதை,லட்சுமணன்,ஆஞ்சநேயர் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.
ஆண்டாள்,நம்மாழ்வார்,உடையவர்,சேனை முதலியார் ஆகியோர் தனி சன்னதியில் காட்சியளிக்கின்றனர்.இத்தலத்தில் மூன்று ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளது.அதில் ராமர் சன்னதியில் இருக்கும் ஆஞ்சநேயர் கைகட்டி வாய்பொத்திய நிலையில் அருள்பாலிக்கிறார். வைணவத் திருத்தலங்களில் புருஷோத்தமன் என்ற திருநாமத்தில் இறைவன் அருள்பாலிக்கும் ஒரே தலம் ஆகும்.இத்தல இறைவனின் வள்ளல் தன்மையை உயர்வுபடுத்திக் காட்ட வண் புருடோத்தமன் என அழைக்கப்படுகிறார்.எனவே இத்தலம் வண்புருடோத்தமம் என அழைக்கப்படுகிறது.
அருகிலுள்ள நகரம்:சீர்காழி.
கோவில் முகவரி:அருள்மிகு வன் புருஷோத்தமன் திருக்கோவில், திருவண்புருசோத்தமம்,திருநாங்கூர் – 609 106 (சீர்காழி-திருநாங்கூர்) நாகப்பட்டினம் மாவட்டம்
பெண்களுக்கு எதிரான சைபர் குற்றத்தை தடுக்கும் விழிப்புணர்வு ஓட்டம் ஆகஸ்ட் 10ம் தேதி நடக்கிறது
கோயம்புத்தூர் ஸ்பெக்ட்ரம் ரோட்டரி கிளப்பின் சார்பில் பெண்களுக்கு மின்சார ஆட்டோ வழங்கப்பட்டது
சாய்பாபா காலனி மேம்பால பணிகளுக்காக இரவு நேர போக்குவரத்தில் முக்கிய மாற்றம்
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவை ஹாப்ஸ் ஏவியேஷன் அகாடமி சார்பில் அஞ்சலி
ஈஷாவில் ‘26-வது தியானலிங்க பிரதிஷ்டை தின’ விழாவை முன்னிட்டு நடைபெற்ற சர்வமத இசை அர்ப்பணிப்பு!
மேட்டுப்பாளையம் ஸ்ரீ தியாகராய நிருத்ய கலாமந்திர் நாட்டிய பள்ளியின் மாணவி ச.ஸ்ரீஹரிணிகாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா