• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோவில் வலங்கைமான்

June 21, 2018 findmytemple.com

சுவாமி:அருள்மிகு மகா மாரியம்மன்.

தலச்சிறப்பு:மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் இந்த அம்பாளை வேண்டிக்கொள்வர்.நோய் குணமானவுடன்,’பாடைகாவடி’எடுத்து பிரார்த்தனையை நிறைவேற்றுவர். பக்தர்கள்,”தன் உடல் நலமடைந்தால் உற்சவ காலத்தில் பாடை மீது படுத்து ஆலயத்தை வலம் வருவதாக வேண்டிக் கொள்வர்”.

பங்குனி மாதம் நடைபெறும் உற்சவத்தின் போது ஆயிரக்கணக்கான பாடை வழிபாடுகள் நடைபெறும்.உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் பாடை மீது படுக்க,கயிறால் கட்டுவர்.பிறகு சுமந்து வருவர்.கொள்ளிச் சட்டி எடுக்க வேண்டிய முறை உள்ளவர் அதனை எடுத்துக் கொண்டு முன்னால் வருவார்.இவர்கள் ஆலயத்தை வலம் வந்ததும் பாடை பிரிக்கப்படும்.பிரித்ததும் மஞ்சள் நீரைத் தெளிக்க,படுக்கும் போது மயக்கமுற்றவர் தெளிந்தெழுவார்.வேண்டுதல் நிறைவேற்றப்பட்டதும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவார்கள்.இப்படிப்பட்ட பாடைக் காவடி வழிபாடுகளை ஏற்பதுதான் இந்த மாரியம்மனுக்குச் சிறப்பாகும்.

அருகிலுள்ள நகரம்:கும்பகோணம்.

கோயில்முகவரி:அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்,வலங்கைமான் – 612 804, திருவாரூர் மாவட்டம்.

மேலும் படிக்க