• Download mobile app
25 Jun 2026, ThursdayEdition - 3788
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் திருக்கோவில்

July 16, 2018 findmytemple.com

சுவாமி:சப்தரிஷீஸ்வரர் (சிவன்).

அம்பாள்:பெரிய நாயகி,மகாலட்சுமி,பைரவி (காளி).

மூர்த்தி:தட்சிணாமூர்த்தி,அர்த்தநாரீஸ்வரர்,பிட்சாடனர்.

தலச்சிறப்பு:மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவாக எழுந்தருளியுள்ளார் சப்தரிஷீஸ்வரர். அழகிய சுயம்பு லிங்கம் மேற்கு பார்த்த சந்நதி.திருத்தவத்துறை நாதர் மற்றும் தேஜோவிடங்கர் ஆகிய திரு நாமங்களும் உண்டு.அம்பாள் மஹா சம்பத் கௌரி எனப்படும் பெரிய நாயகி கிழக்கு பார்த்து எழுந்தருளி,தனி சந்நதி கொண்டுள்ளார்.மகாலட்சுமி,பிட்சாடனர்,அர்த்தநாரீஸ்வரர்,பைரவி எனப்படும் காளி ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.

இத்தலத்தில் வீணையைக் கையிலேந்தி,சற்றே வித்தியாசமான கோலத்தில் அருள்பாலிக்கின்றார் தட்சிணாமூர்த்தி.இவரை “வீணா தட்சிணாமூர்த்தி” என்றே தலபுராணம் குறிப்பிடுகின்றது.சிவன் இசையின் தலைவன்.அதை உணர்த்தும் வகையில் அழகிய சடை முடியோடும்,கைகளில் வீணையோடும்,நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் தட்சிணாமூர்த்தி.இத்தல தட்சிணாமூர்த்திக்கு விசேஷ அபிஷேகம் செய்து,குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடக்கிறது.வினை தீர்க்கும் வீணை ஏந்திய தட்சிணாமூர்த்தியை வணங்கினால் வளங்கள் பலவும் பெறலாம்.

இங்கு சற்றே வித்தியாசமான கோணத்தில் நவகிரக சந்நிதி வடிவமைக்கப் பெற்றுள்ளது.இத்தலத்தில் சூரிய பகவானை நோக்கி நவகிரக சந்நிதி அமைந்திருப்பது தனிச்சிறப்பு ஆகும்.தோஷங்களால் பாதிக்கப்பட்டோர் நெய் விளக்கேற்றியும்,விசேஷ பூஜைகள் செய்தும்,நவகிரக சந்நிதியை ஒன்பது முறை வலம் வந்து வழிபடுகின்றனர்.இதனால் சகல தோஷங்களும் நீங்கப் பெறும் என்பது நம்பிக்கை.

அருகிலுள்ள நகரம்:திருச்சி.

கோயில் முகவரி:அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் திருக்கோவில்,லால்குடி,திருச்சி. மாவட்டம்.

மேலும் படிக்க