• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு காளஹஸ்தீஸ்வர சுவாமி திருக்கோவில்

May 14, 2018 findmytemple.com

சுவாமி : அருள்மிகு காளஹஸ்தீஸ்வர சுவாமி.

அம்பாள் : அருள்மிகு ஞானாம்பிகை.

மூர்த்தி : கல்யாணசுந்தரமூர்த்தி, அஷ்டதச புஜமகா துர்க்கை, ஜீரகேஸ்வர்.

தலமரம் : வில்வம் மரம்.

தலச்சிறப்பு : இத்தலத்தில் உள்ள ஞானாம்பிகையை வழிபட்டால் வாயுலிங்க சேத்திரமான காளஹஸ்தி பெருமானை வழிபட்ட பலன் கிடைக்கும்.கடுமையான ஜுரம் அடிப்பவர்கள் இத்தல ஜுரகேஸ்வரருக்கு வெந்நீரில் அபிஷேகம் செய்து,புழுங்கல் அரிசி,நிவேதனம் செய்து மிளகுரசம், பருப்பு துவையல் நிவேதனம் செய்து,வில்வ அர்ச்சனை செய்து விபூதிப் பிரசாதத்தை சாப்பிட்டால் ஜுரம் குறைந்து விடும்.இத்தலத்தில் உள்ள ஆராய்ச்சிமணியை அடித்தால் “ஓம்” என்ற ஓசை கேட்கும்.இத்தலப் பெருமானும் மகாமகத்திற்கு எழுந்தருள்வார்.

தலவரலாறு: தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரால் இக்கோயில் புதுப்பிக்கப்பெற்றது.இத்தலத்தில் உள்ள ஞானபிரகலாம்பிகையை வழிபட்டால் வாயுலிங்கத் தலமான காளஹஸ்தி பெருமானை வழிபட்ட பலன் கிடைக்கும்.இக்கோயிலில் கார்த்தியாயினி சமேத கல்யாண சுந்தரமூர்த்தி சன்னதி தனிச் சிறப்புடன் விளங்குகிறது.

மேலும் படிக்க