• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு ஸ்ரீ ஐய்யனார் திருக்கோவில்

April 10, 2018 findmytemple.com

சுவாமி : ஸ்ரீ ஐய்யனார்.

அம்பாள் : பூர்ணாதேவி, புஸ்கலாதேவி.

தலச்சிறப்பு : தாருகாவனத்தில் இருந்த மகரிஷிகளின் அகங்காரத்தை அழிப்பதற்காக சிவபெருமான் பிட்சாடனர் உருவமும், விஷ்ணு மோகினி உருவமும் கொண்டனர். பிட்சாடனர் மகரிஷிகளின் பத்தினிகள் வாழும் வீடுகளுக்கு சென்று பிச்சை கேட்டார். சிவபெருமானின் தோற்றத்தைக் கண்ட மகரிஷிகளின் பத்தினிகளுக்கு மனத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது. அதே போல் மோகினி ரிஷிகள் வேள்விகள் செய்யும் இடத்திற்குச் சென்று ரிஷிகளின் மனதிலும் தடுமாற்றத்தை ஏற்படுத்தினார். இதனால் வேள்வி தடைபட்டது. அப்பொழுது மோகினி உருவத்தின் மீது சிவபெருமான் காதல் கொண்டதால், கண்மாய்க்கரையில் பிறந்தவர் ஐய்யனார் அல்லது சாஸ்தா என அழைக்கப்படுகிறார்.

ஐய்யனார் மாசி மாதம் தேய்பிறையில் அமாவாசைக்கு முதல்நாள் சிவராத்திரி அன்று பிறந்தார். ஐய்யனாருக்குப் பூர்ணாதேவி, புஸ்கலாதேவி என இரண்டு தேவிகள் உள்ளனர், ஐய்யனார் தேவலோகத்தைச் சேர்ந்தவர். ஆனால் பூலோகத்தில் அவதரித்தவர். எனவே தேவலோகத்தைச் சேர்ந்த புஸ்கலாதேவியும் பூலோகத்தைச் சேர்ந்த பூர்ணாதேவியும் துணைவியராக உள்ளனர்.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோவில் முகவரி : அருள்மிகு ஐய்யனார் திருக்கோவில்,

குறிச்சி கிராமம், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.

மேலும் படிக்க