• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தோனியை டாப் வீரர் பட்டியலிலிருந்து நீக்க பிசிசிஐ புது திட்டம்

January 5, 2018 tamil.samayam.com

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர் அதிக சம்பளம் பெறும் ‘ஏ’கிரேடில் உள்ளார்.

சம்பள உயர்வு பிரச்னை :

தற்போதுள்ள இந்திய அணி வீரர்களை A,B,C என மூன்று வகையாக பிரித்து A கிரேடு வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 2 கோடியும், B கிரேடு வீரர்களுக்கு ரூ. 1கோடியும், C கிரேடு வீரர்கள் ரூ. 50 லட்சமும் பெற்று வருகின்றனர்.இந்நிலையில் வீரர்களுக்கு சம்பள உயர்வு வேண்டும் என கோலி, தோனி, ரவி சாஸ்திரி தலைமையில் பிசிசிஐ தலைவர் வினோத் ராயிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அவரும் அதை ஏற்றுக்கொண்டார்.

தோனி நீக்கம் ?

இந்நிலையில் A,B,C கிரேடுடன் A+ என்ற கிரேடை புதிதாக சேர்க்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் விளையாடாத தோனி அதே A கிரேடிலும், ஏனைய முன்னனி வீரர்கள் A+ கிரேடில் வைத்துவிட்டு, தோனியை A கிரேடிலேயே நீட்டிக்கக் கூடும் என தெரிகிறது.இப்படி தோனியின் சம்பளத்தில் கை வைக்க பிசிசிஐ புதிய திட்டத்தை தீட்டி வருகின்றது.

மேலும் படிக்க