• Download mobile app
09 May 2024, ThursdayEdition - 3011
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஏலத்தில் அஸ்வினை பறிகொடுத்த சென்னை அணி ஏமாற்றத்தில் ரசிகர்கள்

January 27, 2018 தண்டோரா குழு

11 வது ஐ.பி.எல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் இன்று நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு சென்னை, ராஜஸ்தான் அணிகள் மீண்டும் களமிறங்க உள்ளன.

இரண்டு வருடங்களுக்கு பிறகு சென்னை அணி மீண்டும் களமிறங்க உள்ளதால் சி.எஸ்.கே ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். சிஎஸ்கே ஏற்கனவே தோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோரை அணியில் தக்கவைத்துக் கொண்டது. தமிழரான அஸ்வினை தக்கவக்காதால் சென்னை ஏமாற்றமடைந்தனர்.

இதையெடுத்து இன்று நடைபெறவுள்ள ஏலத்தில் சென்னை அணி அஸ்வினை வாங்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆரம்பத்தில் 2 கோடி நிர்ணயம் செய்யப்பட்ட அஸ்வினை எடுக்க சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் போட்டியிட்டனர். முடிவில் அஸ்வினை ரூ.7.60 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.

சென்னை அணி ஏலத்தில் எடுக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் பஞ்சாப் அணி எடுத்தது சென்னை ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

மேலும் படிக்க