• Download mobile app
31 Aug 2026, MondayEdition - 3855
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐபிஎல் 2018: தக்க வைக்கும் வீரர்கள் பட்டியல் மாலை அறிவிப்பு!

January 4, 2018 tamil.samayam.com

ஐபிஎல் 2018 தொடரில் அணிகள் எந்த வீரர்களை தக்க வைக்க உள்ளது என்ற பட்டியல் இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளது.

இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் (ஐபிஎல்) வெற்றிகரமாக நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சுமார் 2 ஆண்டுகள் சூதாட்ட தடைக்கு பின் மீண்டும் இந்த ஆண்டு களமிறங்கவுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம், வரும் ஜனவரி 27, 28ல் நடக்கவுள்ளது. இதனால் ஒவ்வொரு அணியும் எந்த வீரர்களை தக்கவைக்கலாம், எந்த வீரர்களை விடுவிக்கலாம் என்ற குழப்பத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் சென்னை அணியின் கேப்டன் தோனி என்பது ஏற்கனவே உறுதியாகியுள்ளது. தவிர, ரெய்னாவும் சென்னை அணி தக்கவைக்கும் விஷயம் உறுதியாகியுள்ளது. இந்நிலையில் மற்ற அணிகள் எந்த எந்த வீரர்களை தக்க வைக்கவுள்ளது என்ற இறுதி பட்டியலை இன்று மாலை பிசிசிஐ.,யிடம் ஐபிஎல்., அறிவிக்கவிக்க வேண்டும். இதனால் இன்று மாலை இதுகுறித்து உறுதியான தகவல்கள் வெளியாகும்.

மேலும் படிக்க