• Download mobile app
02 May 2026, SaturdayEdition - 3734
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐபிஎல் 2018: ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி

May 9, 2018 தண்டோரா குழு

11வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியைத் வீழ்த்தியது.

டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது.அதிகபட்சமாக அந்த அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 58 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

159 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே எடுத்து பஞ்சாப் அணி தோல்வியைத் தழுவியது.அந்த அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 70 பந்துகளில் 95 ரன்கள் எடுத்தார்.இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டது.

மேலும் படிக்க