• Download mobile app
31 Aug 2026, MondayEdition - 3855
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

54வது பந்தில் முதல் ரன் எடுத்த புஜாராவுக்கு வீரர்கள் எழுந்து நின்று வரவேற்பு

January 24, 2018 தண்டோரா குழு

தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 54வது பந்தில் முதல் ரன் எடுத்த புஜாராவுக்கு வீரர்கள் எழுந்து நின்று வரவேற்பு கொடுத்தனர்.

தென்னாப்ரிக்காவிற்கு சுற்றுபயணம் கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கடந்த இரு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் இன்று (ஜன 24) 3-வது டெஸ்ட் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி ஒயிட்வாஷை தவிர்க்கும் முனைப்புடன் களமிறங்கவுள்ளது.

இதில், டாஸ் வென்ற இந்தியா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணி தரப்பில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரோஹித் சர்மாவுக்கு பதில் ரஹானேவும், அஸ்வினுக்கு பதில் புவனேஷ்வர் குமாரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், துவக்க வீரர்களாக களமிறங்கிய முரளி விஜய், ராகுல் சொற்ப ரன்களில் வெளியேறினர். பின்னர் களமிறங்கிய புஜாரா, விராட் கோலி நிதானமாக விளையாடி வருகின்றனர்.

இதற்கிடையில், மிகவும் நிதானமாக விளையாடிய புஜாரா தாம் எதிர்கொண்ட 54வது பந்தில் தான் முதல் ரன் எடுத்தார். இதானல், புஜாரா முதல் ரன் எடுத்தாலும் மாற்ற இந்திய வீரர்கள் சிரித்துக்கொண்டே எழுந்து நின்று வரவேற்பு கொடுத்தனர். இதனைப்பார்த்த புஜாராவும் புன்னைகைத்தார்.

மேலும் படிக்க