• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்திய அணி வீரர்கள் ‘பேட்டிங்கில்’ முழு கவனம் செலுத்த வேண்டும் – பத்ரிநாத்

August 22, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 60ம் ஆண்டு விழா கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் நடைபெற்றது.அதில் சிறப்பு விருந்தினராக இந்திய கிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் கலந்துக் கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் மற்றும் சிறந்த வீரர்களுக்கு கோப்பைகள் மற்றும் விருதுகளை வழங்கி பாராட்டினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“டி.என்.பி.எல் கிரிக்கெட் மூலம் கிரிக்கெட் விளையாட்டு மிகப்பெரும் வளர்ச்சி கண்டுள்ளது.உள்ளூர் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களை அடையாளம் காண்பதற்கு மிகப்பெரும் தளமாக இருக்கிறது.டி.என்.பி.எல். மூன்றாவது சீசனில்,முதன் முறையாக பயிற்சியாளராக செயல்படுவதாகவும்,விளையாடும் போதும் கூட எந்த பிரச்சனையும் இல்லாத போது ‘மேட்ச்’ பார்க்கும் போது டென்ஷனாக ஆக உள்ளது.

இந்திய அணி வீரர்களை குறை சொல்வதற்கு எதுவுமில்லை எனவும் இந்திய அணி வீரர்கள் ‘பேட்டிங்கில்’ முழு கவனம் செலுத்த வேண்டும்.தற்போதைய இளைஞர்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அதிக வாய்ப்புகள் கிடைப்பதாகவும்,ஆரம்ப காலங்களில் நன்றாக கற்றுக்கொண்டால்,எதிர் வரும் போட்டிகளில் சாதனை படைக்க சிறந்த வாய்ப்பாக அமையும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும்,கிரிக்கெட் வர்ணனை செய்வதை முதல் வேலையாக செய்து வருவதாகவும் இதுமட்டுமின்றி,’ஸ்டார் ஸ்போர்ட்ஸ்’ நிறுவனத்திடம் வர்ணனைக்கான ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்”.

மேலும் படிக்க