• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னை அணியில் மீண்டும் இடம் பிடித்த மூன்று வீரர்கள்

January 4, 2018 தண்டோரா குழு

ஐபிஎல் 2018 போட்டிகள் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் மகேந்திர சிங் தோனி இடம்பிடித்துள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் என்றழைக்கப்படும் ஐ.பி.எல் போட்டி ஆண்டு தோறும் நடந்து வருகிறது. ஐ.பி.எல் தொடரில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீது சூதாட்டப் புகார் எழுந்தது. இதையடுத்து சூதாட்டப் புகார் குறித்து வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் ஐ.பி.எல் தொடரில் விளையாட தடை விதித்தது. இந்த தடை கடந்த மே மாதத்துடன் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் 2018-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கின்றன.

இதற்கிடையே தங்கள் அணிகளில் விளையாடிய 3 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்று பிசிசிஐ அறிவித்தது. இதையடுத்து எந்த 3 பேரை சென்னை அணி நிர்வாகம் தக்க வைக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில்,சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் ஜடேஜா ஆகியோரை மீண்டும் அணியில் தக்க வைத்தது.இதையடுத்து சென்னை அணியின் கேப்டனாக மீண்டும் தோனி செயல்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க