September 23, 2017 tamilsamayam.com
இந்திய அணியின் வெற்றியில் கேப்டன் கோலி 10,000 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி, சென்னையில் நடந்தது. இதில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது.
இரு அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி, கொல்கத்தாவில் நடந்தது. இதில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி, ஐசிசி., தரவரிசையில் ’நம்பர்-1’ இடத்துக்கு முன்னேறியது.
இப்போட்டியில் வெறும் 8 ரன்களில் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் 30 சதங்கள் என்ற சாதனையை தகர்க்க தவறினார் இந்திய கேப்டன் கோலி. இருந்தாலும், இந்திய அணிக்காக மற்றொரு சாதனையை படைத்தார் கோலி.