• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்மித் விமான நிலையத்தில் குற்றவாளி போல் நடத்தப்பட்டது வேதனையளிக்கிறது – பீட்டர்சன்

March 30, 2018 tamilsamayam.com

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு ஆண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலியா கேப்டன் குற்றவாளியைப் போல் இழுத்து செல்லப்பட்டது மிகவும் வேதனை அளிக்கின்றது என முன்னாள் இங்கிலாந்து வீரர் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரனா 3வது டெஸ்ட் கிரிக்கெட்டின் போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் கையும்,களவுமாக சிக்கிக் கொண்ட பேன்கிராஃப்ட், இந்த செயலுக்கு மூளையாக செயல்பட்ட டேவிட் வார்னர், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்.

இதையடுத்து ஸ்மித், வார்னர் ஆகியோர் ஓராண்டும், பேன்கிராஃப்ட் 9 மாதங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் ஸ்மித் இரண்டு ஆண்டுகள் கேப்டன் பதவி பெற முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கண்ணீர் மல்க ஸ்மித் மன்னிப்பு கேட்டார்.

இந்நிலையில் நேற்று தென் ஆப்ரிக்கா தலைநகர் ஜோகனஸ் பெர்க் விமான நிலையத்திலிருந்து ஆஸ்திரேலியா புறப்பட்ட ஸ்டீவ் ஸ்மித், விமான நிலைய போலீஸ் அதிகாரிகளால் குற்றவாளியை அழைத்து செல்வது போல் அழைத்து செல்லபட்டார்.

 

 

மேலும் படிக்க