• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வாள்வீச்சு ‘மாஸ்டருக்கு’ வாழ்த்து சொன்ன கோலி!

August 9, 2017 tamilsamayam.com

சர்வதேச டெஸ்ட் அரங்கில் நம்பர்-1 ஆல் ரவுண்டர் இடம் பிடித்த இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜாவிற்கு கேப்டன் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடரை இந்திய அணி 2-0 என கைப்பற்றியது. இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி, வரும் 12ல் கண்டியில் துவங்குகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா, பவுலர்களுக்கான தரவரிசையிலும், ஆல் ரவுண்டர்கள் தரவரிசையிலும் நம்பர் -1 இடத்துக்கு முன்னேறினார். இதற்காக இவருக்கு டுவிட்டரில் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கோலி வெளியிட்டுள்ள் பதிவில்,’நம்பர்-1 இடத்துக்கு முன்னேறிய வாள்வீச்சு மாஸ்டர் ரவிந்திர ஜடேஜாவுக்கு, வாழ்த்துக்கள். வெல் டன் ஜாது.’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க