• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வார்னர், ஸ்மித் கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை – ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்

March 28, 2018 தண்டோரா குழு

பந்தை சேதப்படுத்திய விவகாரதத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித்&டேவிட் வார்னர் ஆகியோர் ஓராண்டுக்கு ஐ.பி.எல். உட்பட எந்த போட்டிகளிலும் பங்கேற்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.

ஆஸ்திரேலியா,தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலிய வீரர் பான் கிராப்ட் பந்தை சேதப்படுத்திய விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.இதனையடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் ஆகியோர் த பதவி பறிக்கப்பட்டது. அதைபோல் ஐபிஎலிலும் இருவரின் கேப்டன் பதவி பறிக்கபட்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கபட்டது.

இந்நிலையில், கிரிக்கெட் விளையாட ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஒராண்டும், பான் கிராப்ட்க்கு 9 மாதங்களும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.  மேலும் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் 2 ஆண்டுகள் கேப்டன் பொறுப்பை வகிக்க முடியாத படியும் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்க