• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மெஸ்ஸியின் சாதனையை சமன் செய்த சுனில் சேத்ரி

June 11, 2018 தண்டோரா குழு

இந்தியாவில் நடைபெற்ற கண்டங்களுக்கிடையே நடைபெறும் கால்பந்து தொடரான இண்டர்காண்டினெண்டல் தொடரில் இந்தியா, நியூசிலந்து, கென்யா, சீன- தைபே ஆகிய அணிகள் கலந்து கொண்டன.

இந்த தொடரின் இறுதி போட்டியில் இந்தியா-கென்யா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 2-0 என்ற கோல்கணக்கில் கென்யாவை வீழ்த்தி இண்டர்காண் டினெண்டல் கால்பந்து கோப்பையை இந்திய அணி வென்றது. இந்திய அணி கேப்டன் சுனில் சேத்ரி அபாரமாக விளையாடி 2 கோல்கள் அடித்தார்.

சுனில் சேத்ரி இறுதி போட்டியில் 2 கோல்கள் அடித்ததன் மூலம் சர்வதேச அளவில் மொத்தம் 64 கோல்களை அடித்து அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸியின் (64 கோல்கள்) சாதனையை சமன் செய்து அசத்தியுள்ளார். இதையடுத்து, அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மேலும் படிக்க