• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்கதேச அணியிலிருந்து சகிப் அல் ஹசன் நீக்கம்

March 6, 2018 tamilsamayam.com

இந்தியா-இலங்கை-வங்கதேசம் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி நாளை தொடங்க உள்ளது.

இலங்கை சுதந்திர தின கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா-இலங்கை-வங்கதேசம் அணிகள் விளையாட உள்ளன. இந்த போட்டித் தொடர் இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நாளை தொடங்க உள்ளன. இதன் முதல் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோத உள்ளன.

சகிப் அல் ஹசன் நீக்கம் :

வங்கதேசத்தின் கேப்டனும், ஆல்ரவுண்டரில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சகிப் அல் ஹசன் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக மஹ்மதுல்லா கேப்டனாக செயல்பட உள்ளார்.

அண்மையில் வங்கதேசம்-இலங்கை-ஜிம்பாப்வே அணிகள் மோதிய போட்டி தொடரின் போது சகிப் அல் ஹசன் பந்து வீசும் இடது கையில் காயம் ஏற்பட்டது. இதனால் இலங்கையில் நடக்கும் முத்தரப்பு போட்டியில் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க