• Download mobile app
02 May 2026, SaturdayEdition - 3734
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய 15 பேர் மத்தியப் பிரதேசத்தில் கைது

June 21, 2017 tamilsamayam.com

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில், பாகிஸ்தான் ஐசிசி சாம்பியன்ஸ் பட்டம் வென்றதை கொண்டாடிய 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சமீபத்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள், இறுதிப்போட்டியில் மோதின. லண்டனில் நடைபெற்ற இந்த போட்டியில், இந்திய அணி, எதிர்பாராவிதமாக, அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.

பாகிஸ்தான் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பர்ஹான்புர் மாவட்டத்தில் மொகாத் என்ற இடத்தில், சில இளைஞர்கள், பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாகக் கோஷமிட்டும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடியுள்ளனர். இதுபற்றி உள்ளூர் மக்கள் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் 15 இளைஞர்களை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க