• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பஞ்சாப் அணிக்காக மீண்டும் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குகிறார் சேவாக்!!

April 2, 2018 tamilsamayam.com

இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக், பஞ்சாப் அணிக்காக மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்க உள்ளார்.

11 வது ஐபிஎல் போட்டிகள், ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான எதிர்ப்பார்ப்பு இப்போதே ரசிகர்கள் மத்தியில் தொற்றிக்கொண்டுள்ளது. இந்த ஆண்டு நடைபெறும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், 2 ஆண்டு தடைக்குப் பின் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளன.

இந்நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனான ஆரோன் பின்ச்க்கு ஏப்ரல் 7 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதால், ஏப்ரல் 8 ஆம் தேதி டெல்லி அணிக்கு எதிராக நடக்கும் பஞ்சாப் அணியின் முதல் போட்டியில் களமிறங்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து, அந்தப் போட்டியில் பின்ச்க்குப் பதிலாக ஓபனிங் பேட்ஸ்மேனாக விரேந்தர் சேவாக் களமிறங்குவார் என பஞ்சாப் அணி அறிவித்துள்ளது. பயிற்சியின் போது, விரேந்தர் சேவாக் சிறப்பாக பந்துகளை எதிர்கொண்டதாக அந்த அணியின் பயிற்சியாளர் பிரேட் ஹாச் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்த விரேந்தர் சேவாக், கடந்த 2015 ஆம் ஆண்டு சர்வதேச மற்றும் ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார். பின்னர், வர்ணனையாளராகவும், பஞ்சாப் அணியின் மேலாளராகவும் பணியாற்றி வந்தார். தற்போது, அவர் பஞ்சாப் அணிக்காக ஓய்விலிருந்து மீண்டும் வந்து விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் செய்தியால் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர்.

 

மேலும் படிக்க