• Download mobile app
02 May 2026, SaturdayEdition - 3734
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நார்​வே செஸ்: விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி!

June 7, 2018 tamilsamayam.com

பிரான்ஸ் வீரர் மேக்ஸ்மி லாகிரேவுக்கு எதிரான 7வது போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்றார்.

நார்வேவில் ஆறாவது நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது.ரவுண்டு ராபின் முறையில் நடக்கும் இத்தொடரில் முன்னணி வீரர்களான ‘டாப்- 10’ வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இதில் ஏழாவது போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்,பிரான்ஸ் வீரர் மேக்ஸ்மி லாகிரேவை எதிர்கொண்டார்.இப்போட்டியின் 40-வது நகர்த்துதலின் போது மேக்ஸ்மி தோல்வியை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து ஆனந்த் 1 புள்ளி பெற்றார்.இதன் மூலம் இதுவரை 6 போட்டியில் பங்கேற்றுள்ள விஸ்வநாதன் ஆனந்த்,3.5 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு முன்னேறினார்.அமெரிக்காவின் வீஸ்லி சோ (3.5 புள்ளிகள்),நார்வேவின் கார்ல்சன் (3.5 புள்ளிகள்),அர்மேனியாவின் லெவான் அரோனியன் (3.5 புள்ளிகள்) ஆகியோர் ‘டாப்-3’ இடங்களில் உள்ளனர்.

மேலும் படிக்க