• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நார்​வே செஸ்: விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி!

June 7, 2018 tamilsamayam.com

பிரான்ஸ் வீரர் மேக்ஸ்மி லாகிரேவுக்கு எதிரான 7வது போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்றார்.

நார்வேவில் ஆறாவது நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது.ரவுண்டு ராபின் முறையில் நடக்கும் இத்தொடரில் முன்னணி வீரர்களான ‘டாப்- 10’ வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இதில் ஏழாவது போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்,பிரான்ஸ் வீரர் மேக்ஸ்மி லாகிரேவை எதிர்கொண்டார்.இப்போட்டியின் 40-வது நகர்த்துதலின் போது மேக்ஸ்மி தோல்வியை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து ஆனந்த் 1 புள்ளி பெற்றார்.இதன் மூலம் இதுவரை 6 போட்டியில் பங்கேற்றுள்ள விஸ்வநாதன் ஆனந்த்,3.5 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு முன்னேறினார்.அமெரிக்காவின் வீஸ்லி சோ (3.5 புள்ளிகள்),நார்வேவின் கார்ல்சன் (3.5 புள்ளிகள்),அர்மேனியாவின் லெவான் அரோனியன் (3.5 புள்ளிகள்) ஆகியோர் ‘டாப்-3’ இடங்களில் உள்ளனர்.

மேலும் படிக்க