• Download mobile app
31 Aug 2026, MondayEdition - 3855
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘தல’ தோனி ஹெல்மெட்டில் மூவர்ண கொடி இல்லாத காரணம்

March 1, 2018 tamilsamayam.com

முன்னாள் இந்திய கேப்டன் தோனியில் ஹெல்மெட்டில் மூவர்ண கொடி இல்லாத காரணம் குறித்து ரசிகர் ஒருவர் சுவாரஸ்யமான தகவலை அளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின், தனது ஹெல்மெட்டில் இந்திய மூவர்ண கொடியை ஒட்டி முதல் முதலில் பயன்படுத்தினார். அதன் பின் அவரை ரோல்மாடலாக கொண்டு விளையாடும் தற்போதைய கேப்டன் விராட் கோலி உள்ளிட்டபலர் ஹெல்மெட்டில் இந்திய கொடியை பயன்படுத்தி வருகின்றனர்.

தேசப்பற்று தோனி:

ஆனால் இந்திய தேசத்தின் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ள முன்னாள் கேப்டன் தோனி, தனது ஹெல்மெட்டில் தேசிய கொடியை பயன்படுத்துவது இல்லை. இதற்கான காரணத்தை ரசிகர் ஒருவர் இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.

கீப்பர் கஷ்டம்:
அதில்,’ தோனி விக்கெட் கீப்பர் என்பதால், அடிக்கடி ஹெல்மெட் மற்றும் தொப்பியை மாற்றி மாற்றி பயன்படுத்த வேண்டும். அப்போது ஹெல்மெட்டை அடிஅடிக்கடி டிரசிங் ரூமுக்கு கொண்டு செல்ல முடியாது. அதனால் ஹெல்மெட்டை தரையில் வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இந்திய மூவர்ண கொடி இடம் பெற்ற பொருளை தரையில் வைப்பது, தேசிய கொடியை அவமதிக்கும் செயல் என்பதால், தோனி தனது ஹெல்மெட்டில் பிசிசிஐ.,யின் லோகோவை மட்டும் பயன்படுத்துகிறார்,என குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த விஷயம் குறித்து தோனி தரப்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
சர்ச்சை வரலாறு:
தோனி தலைமையில் இந்திய அணி விளையாடிய போது, மைதானத்தில் ஹெம்மெட்டை பயன்படுத்த போது எச்சில் துப்பும் இடங்களில் தேசிய கொடி இடம் பெற்ற ஹெல்மெட்டை வீரர்கள் வைக்கிறார்கள். அதனால், ஹெல்மெட்டில் மூவர்ண கொடியை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என ஒருவர் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அப்போதும் தோனி, தனது ஹெல்மெட்டில் தேசிய கொடியை பயன்படுத்தவில்லை.

மேலும் படிக்க