• Download mobile app
18 Apr 2024, ThursdayEdition - 2990
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜூவான்டஸ் அணியில் இணைந்தார் நட்சத்திர வீரர் ரொனால்டோ!!

July 17, 2018 தண்டோரா குழு

உலகின் முன்னணி கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியிலிருந்து விலகி,ஜூவன்டஸ் அணியில் இணைந்துள்ளார்.

போர்ச்சுகல் அணியின் கேப்டனான ரொனால்டோ,ஸ்பெயின் ரியல் மாட்ரிட் கிளப்புக்காக தற்போது விளையாடி வருகிறார்.கடந்த 2009 ஆம் ஆண்டு,மான்செஸ்டர் அணியிலிருந்து ரியல் மாட்ரிட் அணிக்கு மாறிய ரொனால்டோ,இதுவரை அந்த அணிக்காக 451 கோல்களை அடித்து,அந்தக் கிளப் வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

9 சீசன்களாக ரியல் மாட்ரீட் அணிக்காக விளையாடும் ரொனால்டோ,இதுவரையில் அந்த அணியின் 16 கோப்பை வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார்.ரியல் மாட்ரீட் கிளப்பின் வரலாற்றிலேயே மிகச் சிறந்த வீரராக மாறியுள்ள ரொனால்டோ,அந்த அணியின் துணை கேப்டனாகவும் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில்,ரொனால்டோ ரியல் மாட்ரீட் அணியிலிருந்து விலகி,இத்தாலி கிளப் அணியான ஜூவன்டஸ் அணிக்கு மாற உள்ளதாக கூறப்பட்ட நிலையில்,இன்று அவர் அதிகாரப்பூர்வமாக ஜூவான்டஸ் அணியில் இணைந்துள்ளார்.ஜூவான்டஸ் அணி சுமார் 100 மில்லியனுக்கு, 4 ஆண்டுகளுகுக் ரொனால்டோவை ஒப்பந்தம் செய்துள்ளது.

இன்று நடைபெற்ற ஜூவான்டஸ் அணியின் செய்தியாளர்கள் சந்திப்பில்,ரொனால்டோவின் ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டதோடு,ரொனால்டோ வுடானான செய்தியாளர் சந்திப்பும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க