• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை துவங்கியது !

April 2, 2018 தண்டோரா குழு

சென்னை எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த டிக்கெட் விற்பனை இன்று தொடங்கி உள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு கடந்த 10 வருடமாக நடந்து வருகிறது.கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள ஐ.பி.எல் தொடரின் 11வது சீசன் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதற்கிடையில் கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற IPL தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்  அணிக்கு இரண்டு ஆண்டு இடைகால தடை விதிக்கப்பட்டது.இதையடுத்து தடை நீங்கி இரு அணிகளும் இந்த சீசனில் களமிறங்கவுள்ளது. கடந்த இரண்டு சீசனில் விளையாடாத சென்னை அணி இந்த முறை களமிறங்குகின்றன. இதனால் தமிழ்நாட்டு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளூரில் 7 லீக் ஆட்டங்களில் ஆடுகிறது. இந்நிலையில்,சென்னை எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த டிக்கெட் விற்பனை இன்று தொடங்கி உள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள டிக்கெட் கவுன்ட்டர்களில் காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதிக்கொண்டு வருகிறது.டிக்கெட் விற்பனை நேரம் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 வரையும்,பின்னர் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் செய்யப்படும். டிக்கெட் ஆன்லைன் மூலமாகவும் அல்லது நேரடியாக அலுவலகத்திற்கு சென்று பெற்றுக்கொள்ளலாம்.

 

மேலும் படிக்க