• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னையில் ஐபிஎல் போட்டி நடந்தே தீரும் – சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி

April 9, 2018 tamilsamayam.com

சென்னை : ஐபிஎல் போட்டிகள் சென்னையிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றப்படாது என சென்னை அணி தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் தொடங்கி கோலாகலமாக நடைப்பெற்று வருகின்றன. அதே சமயம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன.

இதனிடையே சென்னையில் நடைப்பெறும் ஐபிஎல் போட்டியால் போராட்டம் நீர்த்துப் போகும் என கூறி போட்டியை சென்னையில் நடத்தக் கூடாது என கருத்து எழுந்து வருகின்றன.

போட்டி இடமாற்றம்:

இதனால் சென்னையில் நாளை நடைப்பெற உள்ள சென்னை – கொல்கல்த்தா போட்டி திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பேசியுள்ள சென்னை அணி தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், “போட்டியை இடமாற்றம் செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அப்படி இடமாற்றம் செய்யும் எண்ணமும் இல்லை. வேறு இடத்திற்கு மாற்றப்படும் என்ற செய்து வதந்தி அதை நம்ப வேண்டாம்.

போட்டியை உரிய பாதுகாப்புடன் நடத்த சென்னை காவல் துறையிடம் பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளது. மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க