• Download mobile app
02 May 2026, SaturdayEdition - 3734
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கில் அதிரடி: சென்னையை எளிதாக வென்றது கொல்கத்தா

May 4, 2018 tamilsamayam.com

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை அணியை கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.

11வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை – கொல்கத்தா அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

இதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சென்னை அணி கேப்டன் தோனி 25 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார்.

178 ரன்களைச் சேஸ் செய்யக் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு சுனில் நரேன் – கிறிஸ் லின் ஆகியோர் அதிரடித் தொடக்கத்தை அளித்தனர். பின், இளம் வீரர் சுப்மன் கில் நிலைத்து நின்றி சீரான இடைவெளிகளில் பவுண்டரி, சிக்ஸர் என விளாசினார். அவருடன் பேட் செய்த கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் 18 பந்துகளில்45 ரன்களை சேர்த்து அசத்தினார்.

இதனால்,17.4 ஓவர்களிலேயே வெறும் 4 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது கொல்கத்தா அணி. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் நெட் ரன்ரேட் அடிப்படையில் பஞ்சாப் அணியைப் பின்னுக்குத் தள்ளி 3வது இடத்தையும் கொல்கத்தா அணி பெற்றிருக்கிறது. சென்னை அணி இத்தோல்வியின் மூலம் முதல் இடத்தை ஹைதராபாத் அணியிடம் பறிகொடுத்து 2வது இடத்துக்கு சறுக்கியுள்ளது.

மேலும் படிக்க