• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கபடியில் களமிறங்கிய சச்சின்!

June 20, 2017 tamilsamayam.com

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைப்பெறும் தொழில்முறை கபடிப் போட்டியான புரோ கபடி லீக் போட்டியில், இந்த ஆண்டு 5 புதிய அணிகள் இணைக்கப்பட்டுள்ளன.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சார்பில், “தமிழ் தலைவாஸ்” என்ற பெயரில் தமிழக அணி இணை உரிமையாளராகியுள்ளார்.

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டாகவும், இன்றளவும் கிராமப்புறங்களில் விளையாடப்பட்டு வரும் ஒரு விளையாட்டாக கபடிப் போட்டி உள்ளது.

ஐபிஎல் மூலம் கிரிக்கெட் போட்டியை ஊக்கப்பட்டுத்தப்பட்டதன் மூலம், இந்திய அணிக்கு புதிய இளம் வீரர்கள் பலர் கிடைத்தனர்.

அதன் பின்னர் கால்பந்து, ஹாக்கி, பேட்மிண்டன், கபடி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த வகையில் நடத்தப்பட்டு வரும் புரோ கபடிப் போட்டி தொடரின், தமிழக அணியை சச்சின் வாங்கியுள்ளார். அதர்கு ‘தமிழ் தலைவாஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது பெருமையான விஷயம் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கால்பந்து சூப்பர் லீக் போட்டியில், கேரளா பிளாஸ்டர் அணியின் சொந்தக்காரராக சச்சின் உள்ளார்.

மேலும் படிக்க