• Download mobile app
02 May 2026, SaturdayEdition - 3734
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய ஜூனியர் அணி உலகக்கோப்பையை வெல்ல காரணமாக இருந்த டிராவிட்டுக்கு சச்சின்,சேவாக் வாழ்த்து

February 3, 2018 தண்டோரா குழு

ஜூனியர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி கோப்பையைக் வென்றது.

ஜூனியர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய,ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

அந்த அணி 47.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 216 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி களமிறங்கியது.

பின்னர் களமிறங்கிய இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 38.5 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது. இந்திய அணியின் தொடக்க வீரர் மன்ஜோத் கல்ரா (101*) அதிரடியாக ஆடி சதம் விளாசினார்.

மேலும்,இந்திய அணி ஜூனியர் உலகக்கோப்பையை வெல்ல காரணமாக இருந்த இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட்டுக்கு ரூ.50 லட்சம் பரிசும், இந்திய ஜூனியர் அணி வீரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்நிலையில்,இந்திய ஜூனியர் அணி உலகக்கோப்பையை வெல்ல காரணமாக இருந்த இந்திய அணியின் பயிற்சியாளர்  டிராவிட்டுக்கு சச்சின்,சேவாக் உள்ளிட்ட வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க