• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி பத்மபூஷன் விருது பெற்றார்

April 2, 2018 தண்டோரா குழு

டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருது வழங்கும் விழாவில் கிரிக்கெட் வீரர் தோனிக்கு பத்ம பூஷன் விருது வழங்கபட்டது.

இந்தியாவில் ஆண்டுதோறும் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்ம விபூஷன், பத்மபூஷன் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில்,  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனிக்கு 2018-ஆம் ஆண்டுக்கான நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய விருதான பத்ம பூஷன் விருது அறிவிக்கபட்டது.

இந்நிலையில், டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் நிகிழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில்,இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனிக்கு பத்ம பூஷன் விருதை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கெளரவித்தார்.

இதன் மூலம்  பத்மபூஷன் விருதை பெரும் 11-வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை தோனி  பெற்றுள்ளார். ஏற்கெனவே கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் ஆகியோருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.மேலும்,தோனிக்கு ஏற்கெனவே மதிப்பு மிக்க ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதும், பத்மஸ்ரீ விருதும் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க