• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவின் சுழல் பந்துவீச்சில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி

October 6, 2018 தண்டோரா குழு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில், பிருத்வி ஷா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா சதம் விளாசினர். இதன் மூலம், இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 649 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

இதையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. இதனால் அந்த அணி 181 ரன்களுக்குள் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திர அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர், 468 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, இந்திய சுழலில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5, அஸ்வின் 2, ஜடேஜா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இதையடுத்து, முதல் போட்டியிலேயே சதம் அடித்த இளம் வீரர் பிரித்வி ஷாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

மேலும் படிக்க