• Download mobile app
31 Aug 2026, MondayEdition - 3855
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அயர்லாந்துக்கு எதிரான டி-20 போட்டியில் தொடரை கைப்பற்றியது இந்தியா

June 30, 2018 தண்டோரா குழு

அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அயர்லாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது.இதில் முதல் போட்டியில் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் முன்னணி வீரர்களுக்கு ஒய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்கள் கே.எல் ராகுல்,தினேஷ் கார்த்திக்,பும்ரா,உமேஷ் யாதவ்,சித்தார்த் கவுல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.

டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது.இதனையடுத்து தொடக்க வீரராக களமிறங்கிய கோலி 9 ரன்னில் வெளியேற,ராகுலும்,ரெய்னாவும் அதிரடியாக விளையாடினர். இதையடுத்து இந்திய அணி20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது.

பின்னர் களமிறங்கிய அயர்லாந்து அணி சகால்,குல்தீப் சுழலில் சுருண்டது.அயர்லாந்து அணி 12.3 ஓவரில் 70 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.இதன் மூலம் இந்திய அணி,2 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை கைப்பற்றியது.

மேலும் படிக்க