• Download mobile app
18 May 2026, MondayEdition - 3750
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏர்போர்ட்டில் வெறும் தரையில் படுத்து தூங்கும் தோனி – வைரலாகும் புகைப்படம்

April 10, 2019 தண்டோரா குழு

சென்னை விமான நிலையத்தில் தரையில் படுத்து தோனி தூங்கிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

12 ஐபிஎல் போட்டி துவங்கி லீக் ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா அணியை சென்னை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. நாளை சென்னை அணி ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் அணியுடன் மோதவுள்ளது. இதற்காக சென்னை அணி, விமான நிலையத்திற்கு வந்தது.

இதற்கிடையில், தோனியும், அவரது மனைவி சாக்சியும் பயணிகள் அறையின் தரையில் படுத்து உறங்கிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதிகாலையில் விமானம் இருந்தால் இப்படி தான் இருக்கும் என்ற வாசகத்துடன் தோனி சமூக வலைதளத்தில் இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க