• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மகளுக்காக 43 ஆண்டுகளாக ஆண் வேடமிட்டு வாழ்ந்து வந்த தாய்.

July 23, 2016 தண்டோரா குழு

உலகில் வாழும் எத்தனையோ பெண்கள், தங்களது குடும்பத்தை காப்பாற்றப் பல தியாகங்களைச் செய்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு எல்லாம் ஒரு முன்னுதாரணமாக இதுவரை யாரும் செய்யாத ஒரு விஷயத்தை எகிப்து தாய் ஒருவர் செய்துள்ளார்.

எகிப்து நாட்டைச் சேர்ந்த சிசா அபு தாவோக்(64) திருமணமாகி கர்ப்பிணியாக இருந்த போதே அவருடைய கணவர் இறந்துவிட்டார். பிறகு, அவருக்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது.

அவர்களது குடும்ப வழக்கப்படி, பெண்கள் வேலைக்குச் செல்லக்கூடாது. கணவரை இழந்து, பெண் குழந்தையோடு கஷ்டப்பட்ட சிசா, தனது குழந்தையை கௌரவமாகவும், பாதுகாப்பாகவும் வளர்க்க எண்ணி ஒரு புதுமையான யோசனையைப் பின்பற்றினார்.

அதாவது, அவரைப் பற்றி அறியாத ஒரு கிராமத்துக்குச் சென்ற சிசா, அங்கு ஆண் வேடமிட்டு, ஆண்களுக்கான ஆடையை மிகவும் தொலதொலவென்று தைத்து அணிந்து கொண்டு கட்டடப்பணிகளுக்குச் சென்றார். சாலையோரம் செருப்புக்கு பாலீஷ் போட்டும் பணியையும் செய்தார்.

தற்போது தனது பெண்ணை நல்ல முறையில் வளர்த்து, அவளுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார். சுமார் 43 ஆண்டுகளாக ஆண் வேடம் இட்டு ஆண்கள் செய்யும் பணிகளைச் செய்த வந்துள்ளார். இதை அறிந்த அந்த நாட்டின் சமூக சேவை நிறுவனம் ஒன்று அவருக்கு லட்சியத் தாய் என்ற விருது வழங்கிக் கௌரவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தை பிறந்த உடனே குப்பைத் தொட்டியில் தூக்கிவீசும் இந்தக்காலத்து மார்டன் பெண்களுக்கு இவரது தியாகமும், மன உறுதியும் ஒரு பாடமாக இருக்கும் என்பது உறுதி.

மேலும் படிக்க