மும்பை தாக்குதல் பயங்கரவாதியான ஹபீஸ் சயீத் பாகிஸ்தான் பைசாலாபாத்தில் நடந்த பொது கூட்டம் ஒன்றில் உண்மையான சர்ஜிக்கல் ஆப்ரேஷன் என்ன என்பதை இந்தியாவிற்கு காட்டுவோம் என தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். இதனால் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் தற்போது பதற்றமான நிலை உருவாகி உள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் பைசாலாபாத்தில் பொது கூட்டம் ஒன்றில் பேசிய மும்பை தாக்குதல் பயங்கரவாதியான ஹபீஸ் சயீத், உண்மையான சர்ஜிக்கல் ஆப்ரேஷன் என்ன என்பதை இந்தியாவிற்கு காட்டுவோம் என தெரிவித்துள்ளார். சர்ஜிக்கல் ஆப்ரேஷனின் உண்மையான பொருள் என்ன என்பதை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தெரிந்துக் கொள்ள செய்வோம், பதிலடி கொடுப்போம் என்று பேசி உள்ளார்.
மேலும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் எப்படி சர்ஜிக்கல் ஆப்ரேஷன் நடத்துகிறார்கள் என்பதை பாருங்கள்.அமெரிக்காவால் கூட உங்களை காப்பாற்ற முடியாது. இப்போது பாகிஸ்தானின் முறை, பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கவேண்டும் என்றார்.
சிறுமுகை பகுதியில் திருட்டு நடைபெறுவதை தடுத்த காவலர்களுக்கு கோவை எஸ்.பி பாராட்டு
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 41 மனுக்கள் மீது சுமூகமான முறையில் தீர்வு
கோவை உப்பிலிபாளையத்தில் கேலக்ஸி ஹெல்த் எஜுகேஷன் அக்குபஞ்சர் யோகா கிளினிக் பட்டமளிப்பு விழா
கோவையில் மே 28 முதல் துவங்குகிறது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள்
கனடாவில் சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’ வழங்கப்பட்டது
கோவை வேளாண்மை பல்கலைகழகத்தில் 1995ம் ஆண்டு பேட்ஜ் மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்திப்பு