January 18, 2018
தண்டோரா குழு
2018ம் ஆண்டுக்கான அரசாணையை வெளியிடாமல் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி கொடுத்தது சட்ட விரோதம் என சென்னை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற கிளை, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வெளியிடப்பட்ட அரசாணையில் 2017ம் ஆண்டுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் 2018ம் ஆண்டுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிடாத நிலையில் மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டை சட்டவிரோதமாக கருதலாம் எனவும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு ஏன் தடை விதிக்க கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இந்த வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படவுள்ளது.