• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெள்ளை மாளிகையில் ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த தடை!

January 5, 2018 தண்டோரா குழு

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஊழியர்கள் வேலை நேரத்தில் தங்களது செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி
ஜான் கெல்லி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.டொனால்ட் டிரம்ப் அமெரிக்க நாட்டின் குடியரசு தலைவராக பதவி ஏற்ற நாளில் இருந்து வெள்ளை மாளிகையில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் ரகசியமாக பத்திரிகைகளுக்கு செய்திகளாக வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை அதிபர் டிரம்ப் எழுப்பியிருந்தார்.இதனை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும், ரகசியமாக செய்திகள் வெளியாவதை தடுக்க ஊழியர்களின் செல்போன்கள் வெள்ளை மாளிகையின் வயர்லெஸ் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாக வெள்ளை மாளிகையில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க