• Download mobile app
24 Mar 2025, MondayEdition - 3330
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாற்று மொழியால் அவதிப்படும் வெள்ளை புலி

September 29, 2016 தண்டோரா குழு

தமிழ் மொழி மட்டுமே அறிந்த ஆண் புலி ஒன்று வேறு மாநிலத்திற்கு அனுப்பப்பட்டதால் அங்குள்ள மொழி புரியாததால் பராமரிப்பாளர்கள் சொல்வதை ஏற்க மறுக்கிறது.

சென்னையில் உள்ள பிரபல வண்டலூர் அறிஞர் அண்ணா வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து,உதய்பூர் சஜ்ஜன்கார் வனஉயிரியல் பூங்காவுக்கு அண்மையில் ராமா என்ற ஆண் வெள்ளைப்புலி வழங்கப்பட்டது.

மத்திய வனவிலங்குகள் சரணாலய ஆணையத்தின் உத்தரவின் படி இரண்டு ஓநாய்களை வண்டலூர் அறிஞர் அண்ணா வன விலங்குகள் சராணாலயத்துக்கு வழங்கிவிட்டு, அதற்கு பதிலாக ராமா என்ற வெள்ளைப்புலி உதய்பூருக்கு வழங்கப்பட்டது. ஆனால், ராமா புலி பிறந்ததில் இருந்தே சென்னையில் வளர்ந்து விட்டதாலும் அதன் பராமரிப்பாளர்கள் தமிழில் மட்டுமே அதற்கு கட்டளைகள் இட்டு பழக்கியதாலும், தற்போது மொழி தெரியாமல் ராமா புலி தடுமாடுகிறது. இதனால், உதய்பூர் புலி பராமரிப்பாளர்கள் இடும் கட்டளைகளை புரியாமல் தவிக்கிறது.

இதனால் ஒன்று ராமா புலி மேவரி மொழியை கற்க வேண்டும். இல்லையென்றால்,அதன் பராமரிப்பாளர்கள் தமிழ் கற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுக்குறித்து ராஜஸ்தான் மாநில தலைமை வனப் பாதுகாவலர் ராகுல் பட்நாசாகர் கூறுகையில், உதய்பூரில் ஏற்கனவே தாமினி என்ற பெண் புலி உள்ளது.இப்போது ராமா புலியும் வந்திருப்பதால், புலிகள் இனப் பெருக்கத்திற்கு வழி வகுத்துள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க