• Download mobile app
06 May 2025, TuesdayEdition - 3373
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“Western Wall” மீது கை வைத்து பிராத்தனை செய்த அமெரிக்க அதிபர்

May 23, 2017 தண்டோரா குழு

இஸ்ரேல் நாட்டிற்கு அரசு பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப், அங்குள்ள புனித தளமான Western Wall மீது கை வைத்து பிராத்தனை செய்தார்.இங்கு பிராத்தனை செய்த முதல் அமெரிக்க அதிபர் இவரே ஆவார்.

அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் அரசு பயணமாக இஸ்ரேல் நாட்டிற்கு சென்றுள்ளார். எருசலேமில் உள்ள யூதர்களின் புனித தளமான Western Wall பார்க்க அவருடைய மனைவி மெலானியா, மகள் இவாங்கா மற்றும் யூத மருமகன் ஜாரெட் குஷனர் ஆகியோருடன் சென்றுள்ளார்.

அங்கு சென்ற அவர், யூதர்கள் அணியும் தொப்பியை அணிந்து, சுவற்றின் மீது தனது வலது கையை வைத்து, சில நிமிடங்கள் அமைதியாக பிராத்தனை செய்தார். யூத முறைப்படி, பிராத்தனை விண்ணப்பங்களை அந்த சுவற்றின் இடுக்கில் வைப்பது வழக்கம். அதேபோல், அதிபர் டிரம்பும் ஒரு விண்ணப்பத்தை சுவர் இடுக்கில் வைத்துள்ளார்.

அதன்பிறகு, யூத முறைப்படி ஆண்கள் பிராத்தனை செய்யும் அறைக்கு அவரும் அவருடைய மருமகனும் சென்றனர். அவருடைய மனைவியும் மகளும் பெண்கள் பிராத்தனை செய்யும் அறைக்கு சென்றனர். ஒரு தடுப்பு சுவரால் இரண்டு அறைகளும் பிரிக்கப்பட்டுள்ளது.

யூத மக்களின் புனித இடமாக Western Wall கருதப்படுகிறது. அங்குள்ள அல் அக்சா மசூதிக்கு கீழ் இந்த இடம் அமைந்துள்ளது. இஸ்லாமிய புனித தளமான மெக்கா மற்றும் மெதினாவிற்கு அடுத்த புனித தளமாக இந்த இடம் கருதப்படுகிறது. அமெரிக்க அதிபரின் வருகையை அடுத்து, அந்த இடம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க