• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருப்பூர் அருகே மின்சார டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்

January 9, 2018 தண்டோரா குழு

திருப்பூர் அருகே மின்சார டவரில் வாலிபர் ஒருவர் ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் அருகே பெருமாநல்லூர் ரோடு அண்ணா நகர் பகுதியில் உள்ள காட்டய்யன் தோட்டப் பகுதியில் உள்ள உயர் அழுத்த மின்சாரம் டவர் லைனில் செல்வராஜ் என்பவர் குடிபோதையில் மேலே ஏறி கழுத்தில் கயிறு மாட்டிக் கொண்டு கீழே குதித்து விடுவதாக மிரட்டினார்.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் கீழே இறங்கி வருமாறு கூச்சலிட்டனர்.இச்சம்பவம் குறித்து வடக்கு காவல்துறையினருக்கும் மற்றும் வடக்கு தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர்.பின்னர் 4 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு காவல்துறையினர் அவரை மீட்டனர்.

மீட்கப்பட்ட அந்த இளைஞரை விசாரித்ததில் அவர் கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதியை சேர்ந்தவர் என்றும்,இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர் என்பது தெரிய வந்தது.
இவர் குடும்பத்தை விட்டு அவருடைய அக்கா வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

மேலும்,மதுபான கடையில் 2000/- ரூபாய்க்கு சில்லரை தராததால் மனம் உடைந்து குடிபோதையில் டவரில் ஏறியதாக கூறினார்.இதனையடுத்து அவரை காவல்துறையினர் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க