• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கடந்தாண்டை விட 4 லட்சம் வாக்காளர்கள் இந்தாண்டு குறைந்துள்ளனர் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

August 31, 2018 தண்டோரா குழு

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4 லட்சம் வாக்காளர்கள் குறைவாக உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு ஆலோசனை நடத்தினார்.இக்கூட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு,வாக்காளர் பட்டியரில் பெயர் சேர்த்தல்,திருத்தம் மற்றும் நீக்கம் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.மேலும் வாக்காளர் பட்டியல் குளறுபடி,பூத் ஏஜெண்ட் நியமனம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து கட்சி பிரதிநிதிகளிடம் தலைமை தேர்தல் அதிகாரி கேட்டறிந்தார்.

இக்கூட்டத்திற்கு பின் பேசிய அவர்,

நாளை (செப்.,1) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும்,இறுதி வேட்பாளர் பட்டியல் ஜனவரி 4ம் தேதி வெளியாகும்.பின்னர் சிறப்பு வாக்காளர் முகாம் செப்டம்பர் 9 மற்றும் 23,அக்டோபர் 7, 14 போன்ற தேதிகளின் நடைபெறும்.இந்த ஆண்டு இதுவரை 5.72 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.இதனால் கடந்த ஆண்டை காட்டிலும் 4 லட்சம் வாக்காளர்கள் குறைவாக உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க