• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கடந்தாண்டை விட 4 லட்சம் வாக்காளர்கள் இந்தாண்டு குறைந்துள்ளனர் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

August 31, 2018 தண்டோரா குழு

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4 லட்சம் வாக்காளர்கள் குறைவாக உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு ஆலோசனை நடத்தினார்.இக்கூட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு,வாக்காளர் பட்டியரில் பெயர் சேர்த்தல்,திருத்தம் மற்றும் நீக்கம் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.மேலும் வாக்காளர் பட்டியல் குளறுபடி,பூத் ஏஜெண்ட் நியமனம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து கட்சி பிரதிநிதிகளிடம் தலைமை தேர்தல் அதிகாரி கேட்டறிந்தார்.

இக்கூட்டத்திற்கு பின் பேசிய அவர்,

நாளை (செப்.,1) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும்,இறுதி வேட்பாளர் பட்டியல் ஜனவரி 4ம் தேதி வெளியாகும்.பின்னர் சிறப்பு வாக்காளர் முகாம் செப்டம்பர் 9 மற்றும் 23,அக்டோபர் 7, 14 போன்ற தேதிகளின் நடைபெறும்.இந்த ஆண்டு இதுவரை 5.72 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.இதனால் கடந்த ஆண்டை காட்டிலும் 4 லட்சம் வாக்காளர்கள் குறைவாக உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க