• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விஜயகாந்த் குறித்து வதந்திகளை நம்பவேண்டாம் தேமுதிக அறிக்கை

September 1, 2018 தண்டோரா குழு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் விஜயகாந்த்.

திமுக தலைவர் கருணாநிதி இறப்புக்கு அமெரிக்காவில் இருந்து கண்ணீருடன் வீடியோவில் இரங்கல் தெரிவித்திருந்தார்.பின்னர்,சென்னை திரும்பிய அவர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

இதற்கிடையில்,தற்போது மீண்டும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் வழக்கமான பரிசோதனைக்காகவே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால்,விஜயகாந்த் குறித்து பல்வேறு வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக,தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.அதில்,தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் விஜயகாந்த் நலமாக இருக்கிறார்.யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தேமுதிக சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்க