• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய் அரசியலுக்கு வர அவரது தந்தை கோரிக்கை!

October 23, 2017 தண்டோரா குழு

நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

விஜய்யின் நடிப்பில் வெளிவந்த மெர்சல் படத்தில் இடம் பெற்றுள்ள ஜி.எஸ்.டி தொடர்பான வசனங்கள் பா.ஜ.க கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர்கள் அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என கண்டனம் தெரிவித்து வந்தனர். இது தேசிய அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில், விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தனியார் தொலைகாட்சிக்கு பேட்டியளித்தார். அதில், நடிகர் விஜய் காந்தியவாதி, அவர் தலைவராக உருவாகி தன்னை நம்பியவர்களுக்கு மாற்றத்தை தரவேண்டும் என்றும் “மெர்சல்” திரைப்படம் விஜய்யின் கோபத்தின் வெளிப்பாடே என்றும் கூறினார்.

இதனால், தளபதி ரசிகர்கள் விஜய் அரசியலுக்கு நிச்சயம் வருவார், வர வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மேலும் படிக்க