• Download mobile app
14 Jun 2026, SundayEdition - 3777
FLASH NEWS
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு ? இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்

October 13, 2018 தண்டோரா குழு

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு என விஜய்யின் தந்தையும்,இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்துக்கு மக்கள் இயக்கம் என பெயர் சூட்டி பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார்.சமீபத்தில் சர்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசிய சில விஷயங்களை தொடர்ந்து அவர் மீது அரசியல் விமர்சனங்களும்,கருத்துகளும் பெருகி வருகிறது.விஜய்யின் அரசியல் பேச்சை தமிழக அமைச்சர்கள் எதிர்த்தனர்.

இந்நிலையில்,நடிகர் விஜய்யின் தந்தையும்,இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணியில் நிகழும் மகா புஷ்கரம் விழாவில் கலந்துக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு. அவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என தமிழன் என்ற முறையில் விரும்புகிறேன்.வழக்கறிஞர்கள், விவசாயிகள் என பல துறைகளை சார்ந்தவர்கள் அரசியலுக்கு வரும் போது மக்களால் உயர்த்தப்பட்டவர்,மக்களுக்கு நல்லது செய்வதற்கு வந்தால் அதில் என்ன தவறு.விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் அச்சப்படுகிறார்கள்.பிறப்பாக கிறிஸ்தவராக இருந்தாலும் இந்தியாவில் பிறந்ததால் இந்து மதத்தை பின்பற்றுகிறேன்.என்னை ஆன்மீகவாதியாக மாற்றியது சத்குரு ஜக்கி வாசுதேவ்தான்”.இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க