• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

துறைத்தலைவரின் மறைமுக தொந்தரவால் மாணவர் தற்கொலை – கல்லூரி வளாகத்தில் போராட்டம்

October 26, 2017 தண்டோரா குழு

துறைத்தலைவரின் மறைமுக தொந்தரவால் மாணவர் தற்கொலை செய்து கொண்டதாககூறி சக மாணவர்கள் அக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் அடுக்கும்பாறை என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் சென்னையில் இயங்கி வரும் அரசு கவின் கலைக் கல்லூரியில் செராமிக் (சுடுமண்) துறையில் இறுதியாண்டு படித்துவந்தார். இந்நிலையில் சொந்த ஊரான வேலூர் சென்றிருந்த பிரகாஷ், நேற்றிரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மேலும்,`எனது சாவுக்கு துறைத்தலைவர் (H.O.D) மட்டுமே காரணம்’ என்று 4 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இதனால், துறைத்தலைவரின் மறைமுக தொந்தரவால் மாணவர் தற்கொலை செய்து கொண்டதாககூறி சக மாணவர்கள் அக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து, மாணவர் தற்கொலைக்கு காரணமாக கூறப்படும் சம்பந்தப்பட்ட துறையாசிரியர்மீ மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என கல்லூரி முதல்வர் மதியழகன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க