• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆம்பூரில் 1500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

September 1, 2016 தண்டோரா குழு

ஆம்பூர் அருகே மிட்டாளத்தில் ஒவ்வொரு பணிக்கும் அங்குள்ள கிராம நிர்வாக அதிகாரி கட்டாயப்படுத்தி லஞ்சம் வாங்குவதாகக் கூறப்பட்டது.இந்நிலையில் தன்னுடைய பெயரில் வந்த நிலத்தைப் பட்டா மாறுதலுக்காக குமார் என்பவர் விண்ணப்பித்து இருந்தார்.

அந்த வேலையை முறையாகச் செய்து முடிக்காத கிராம நிர்வாக அதிகாரி சத்யா.அப்படி முடித்துத் தரவேண்டும் என்றால் 1,500 லஞ்சம் கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.லஞ்சம் கொடுக்க மனமில்லாத குமார் இது குறித்து ஆம்பூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் தகவல் கொடுத்தார்.

இதையடுத்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்தனுப்பிய லஞ்சஒழிப்பு காவலர்கள்.அந்தப் பணத்தை விஏஓ சத்யா வாங்கியவுடன்,அவரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கைது செய்தனர்.பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

மேலும் படிக்க