• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்திய தொழிலாளர்களுக்கு உதவி செய்வதாக உறுதியளித்த சவூதி அமைச்சர்

August 4, 2016 தண்டோரா குழு

சவுதி அரேபியாவில் பல்வேறு கட்டடங்களில் கட்டுமானத் தொழிலில் ஈடுபடுவதற்காகச் சென்ற இந்தியர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தற்போது அங்கு எண்ணெய் விலை குறைந்ததால் நிறுத்தப்பட்ட கட்டுமானங்களால் வேலை இழந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி சம்பள பாக்கியும் உள்ளதால் அவர்களது நிலை மிகவும் மோசமாக உள்ளது என அங்கிருந்து உறவினர்களுக்குத் தகவல் அனுப்பியுள்ளனர். இதையடுத்து இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் அங்குள்ள தூதரை தொடர்பு கொண்டு அவர்களுக்கு ரேசன் முறையில் உணவு வழங்கி வருகிறது. அவர்களை இந்தியாவிற்கே அழைத்து வருவதற்காக நேற்று சவூதி சென்ற வெளியுறவுத் துறை அமைச்சர் வி.கே. சிங் அங்குள்ள அதிகாரிகளையும் அமைச்சரையும் சந்தித்து பேசியுள்ளார்.

இந்நிலையில் அவர்களது நிலை குறித்து பேசிய வி.கே.சிங், அந்நாட்டுத் தொழிலாளர்கள் நலத்துறை அமைச்சர் முபார்ரேஜ் அல் ஹக்பானி உடனடியாக 2,500 தொழிலாளர்களின் பிரச்சனையைத் தீர்த்து வைப்பதாக உறுதியளித்துள்ளார் எனவும், மேலும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அவர்கள் இந்தியா இந்தியா திரும்பினாலும் அவர்களது பணப் பயன்கள் கட்டாயம் பெற்றுத்தரப்படும் எனவும் உறுதியளித்ததாகத் தெரிவித்துள்ளார். இதனால் அங்குள்ள தொழிலாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க