• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெண்காவலர் மீது அமிலம் வீசியவர்களைப் பிடிக்க 5 தனிப்படைகள்

December 24, 2016 தண்டோரா குழு

திருப்பத்தூரில் பெண் காவலர் மீது திராவகம் (ஆசிட்) வீசிய மர்ம நபர்களைப் பிடிக்க திருப்பத்தூர் டிஎஸ்பி பன்னீர்செல்வம் மற்றும் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வரும் பெண் காவலர் லாவண்யா மீது வெள்ளியன்று இரண்டு நபர்கள் ஆசிட் வீசிவிட்டு தப்பிச் சென்றனர். அதில் அவரது முகம், வலது கை மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையெடுத்து, சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

இது குறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார். மேலும், கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக பெண் காவலரின் கணவர் உட்பட இருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க